ஒரு இந்து திருமணத்திற்கான சட்ட நிபந்தனைகள்
Law Awareness 06 Mar 2026
← Back to News
Link copied successfully.

ஒரு இந்து திருமணத்திற்கான சட்ட நிபந்தனைகள்

ஒரு இந்து திருமணத்திற்கான சட்ட நிபந்தனைகள் (Hindu Marriage Act & Prohibition of Child Marriage Act – விளக்கத்துடன்) 1. இந்து திருமணத்தின் அடிப்படை நிபந்தனை இந்து திருமணச் சட்டம், 1955 – பிரிவு 5ன் படி, ஒரு செல்லுபடியான இந்து திருமணம் நடைபெற சில அடிப்படை நிபந்தனைகள் அவசியமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று வயது தொடர்பான நிபந்தனையாகும். 2. திருமண வயது தொடர்பான நிபந்தனை **இந்து திருமணச் சட்டம் பிரிவு 5(iii)**ன் படி, திருமணம் செய்யும் இந்து ஆண் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். திருமணம் செய்யும் இந்து பெண் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இந்த வயது நிபந்தனை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கமாகும். 3. வயது குறைவு இருந்தால் திருமணத்தின் சட்ட நிலை இந்த வயது நிபந்தனையை மீறி திருமணம் நடைபெற்றிருந்தாலும், அந்த திருமணம் இல்லா நிலையது (Void Marriage) ஆகவோ அல்லது தவிர்க்கத்தகு (Voidable Marriage) ஆகவோ தானாகவே மாறாது. இதனை இந்து திருமணச் சட்டம் பிரிவு 11 மற்றும் 12 தெளிவாக கூறுகிறது. 4. விவாகரத்து பெறுவதற்கான காரணங்கள் இந்து திருமணச் சட்டம் பிரிவு 13ல், எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் விவாகரத்து பெறலாம் என்பதைக் கூறப்பட்டுள்ளது. அதில் வயது தொடர்பான ஒரு சிறப்பு உரிமை பிரிவு 13(2)(iv) (சில பதிப்புகளில் 13(2)(ib) என குறிப்பிடப்படுகிறது)ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 5. சிறுமி (Minor Girl)க்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை ஒரு பெண்ணுக்கு, 15 வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றிருந்தால், அந்த திருமணத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை, 18 வயது நிறைவடைவதற்கு முன்பே அறிவித்து, அந்த திருமணத்தை நிராகரித்து விவாகரத்து கோர முடியும். 6. குழந்தை திருமண தடைச் சட்டம் – குழந்தை என்ற வரையறை **Prohibition of Child Marriage Act, 2006 – பிரிவு 2(a)**ன் படி, ஆண் : 21 வயது நிறைவடையாதவர் பெண் : 18 வயது நிறைவடையாதவர் இவர்கள் சட்டப்படி “குழந்தை” எனக் கருதப்படுகிறார்கள். 7. குழந்தை திருமணம் – குற்றத்தின் தன்மை குழந்தை திருமண தடைச் சட்டம் – பிரிவு 15ன் படி, குழந்தை திருமணம் என்பது பிணையில் விடமுடியாத (Non-bailable) குற்றமாகும். 8. குழந்தை திருமணத்தை ரத்து செய்யும் உரிமை திருமணத்தின் போது இளவராக (Minor) இருந்த தரப்பினர், அந்த திருமணத்தை ரத்து செய்ய (Annulment of Marriage) மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உரிமை பெற்றுள்ளனர். 9. பழைய குழந்தை திருமணங்களுக்கும் சட்டம் பொருந்தும் குழந்தை திருமண தடைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னரே நடைபெற்ற திருமணமாக இருந்தாலும், அல்லது சட்டம் அமலுக்கு வந்த பிறகு நடைபெற்ற திருமணமாக இருந்தாலும், அந்த திருமணத்தை தவிர்க்கத்தகு (Voidable) என அறிவிக்க கோரி மனு தாக்கல் செய்ய முடியும். 10. மனு தாக்கல் செய்ய வேண்டிய நீதிமன்றம் இந்த வகை மனுக்கள் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். 11. மனு தாக்கல் செய்வோர் யார்? மனுதாரர் இளவராக இருந்தால், அவரே அல்லது அவரது காப்பாளர் (Guardian) அல்லது நண்பர் (Next Friend) மூலமாக, குழந்தை திருமண தடுப்பு அதிகாரியுடன் (Child Marriage Prohibition Officer) இணைந்து மனு தாக்கல் செய்ய வேண்டும். 12. மனு தாக்கல் செய்ய வேண்டிய காலவரம்பு இந்த சட்டத்தின் கீழ், உரிய வயதை (Majority) அடைந்த பின்னர், 2 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதன்பிறகே அந்த மனுவை தாக்கல் செய்ய முடியும். 13. பணம் மற்றும் நகை திருப்பிச் செலுத்தும் உத்தரவு மாவட்ட நீதிமன்றம், திருமணத்தை செல்லாததாக அறிவிக்கும் போது, திருமணத்தின் போது பெற்ற பணம் நகைகள் மதிப்புள்ள பொருட்கள் அன்பளிப்புகளுக்கு இணையான தொகை இவற்றை திருப்பிச் செலுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட முடியும். 14. காரணம் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது இந்த வகை உத்தரவை பிறப்பிக்கும் முன், “ஏன் இப்படிப் பட்ட உத்தரவு வழங்கக்கூடாது?” என்பதற்கான காரணம் விளக்க, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு நீதிமன்றம் முன் அறிவிப்பு (Notice) வழங்க வேண்டும். 15. முக்கிய நீதிமன்ற தீர்ப்பு – T. சிவக்குமார் வழக்கு T. சிவக்குமார் Vs காவல்துறை ஆய்வாளர், திருவள்ளூர் (2011–5–CTC–689 / AIR 2012 MAD 62) என்ற வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு பின்வருமாறு தீர்மானித்தது: 16. இளவர் என்ற சொல்லின் விளக்கம் **குழந்தை திருமண தடைச் சட்டம் – பிரிவு 2(f)**ன் படி, “இளவர் (Minor)” என்பது இந்திய வயது வந்தோர் சட்டம், 1875ன் கீழ் உரிமை வயதை அடையாத நபர் எனப் பொருள்படும். 17. மனு தாக்கல் செய்யும் காலக் கணக்கு ஒரு குழந்தைக்கு இளவர் நிலை உரிமை வயதை அடையும் நாளில் முடிவடைகிறது. அந்த நாளிலிருந்து 2 ஆண்டுகள் கழித்தே திருமணத்தை ரத்து செய்யும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Chat with us