மௌனமாக இருக்கும் மக்களே ஜனநாயகத்தின் முதல் தோல்வி
Law Awareness 06 Mar 2026
← Back to News
Link copied successfully.

மௌனமாக இருக்கும் மக்களே ஜனநாயகத்தின் முதல் தோல்வி

“மௌனமாக இருக்கும் மக்களே ஜனநாயகத்தின் முதல் தோல்வி” நாட்டில் தினமும் ஏதாவது ஒன்று நடக்கிறது. ஒரு பக்கம் விலையேற்றம், மறுபக்கம் வேலைவாய்ப்பு இழப்பு, இன்னொரு பக்கம் அதிகார துஷ்பிரயோகம். ஆனால் இதற்கிடையில் அதிகமாக பெருகுவது மக்களின் மௌனம். ஒரு தவறு நடந்தால் “நமக்கு என்ன?” என்று ஒதுங்குவது, ஒரு அநியாயம் நடந்தால் “நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று தப்பிப்பது— இவை அனைத்தும் அரசியல் சோம்பேறித்தனம் அல்ல, ஜனநாயகத்தை மெதுவாக கொல்லும் பழக்கம். அரசியல் என்பது கட்சிகளுக்கானது மட்டும் அல்ல. அது சாலையிலுள்ள குழியிலிருந்து சட்டமன்றத்திலுள்ள தீர்மானம் வரை ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் சக்தி. இன்றைய அரசியல் சூழலில் உண்மையை கேள்வி கேட்பவன் “எதிரி” ஆகவும், அமைதியாக இருப்பவன் “நல்ல குடிமகன்” ஆகவும் அர்த்தமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? அதிகாரம் தவறும்போது மக்கள் கேள்வி கேட்காத நாடுகள் முன்னேறியதாக இல்லை— அவை அடக்குமுறைக்கு அடிமையானதாக மாறியுள்ளன. தமிழ் மண் போராட்டங்களால் பேசத் தெரிந்த மண். மௌனத்தால் வாழ்ந்த மண் அல்ல. இன்றாவது ஒரு கேள்வி கேளுங்கள். ஒரு தவறை சுட்டிக்காட்டுங்கள். ஒரு உண்மையை பகிருங்கள். ஏனெனில் மௌனம் பாதுகாப்பு அல்ல— அது எதிர்காலத்திற்கு வைக்கப்படும் ஆபத்து.
Chat with us