ஒரு சாதாரணக் குடிமகன், நியாயமான காரணத்திற்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை பெறுவது, நடைமுறையில் மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. காரணம், ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் முழு அதிகாரமும் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மனிதவளம், வசதிக் குறைவு போன்ற காரணங்களை முன்வைத்து, பல புகார்கள் ஆரம்பத்திலேயே ஏற்கப்படாமல் தள்ளப்படுவது கசப்பான உண்மையாக உள்ளது